sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மத்திய அரசு ஆசிரியர்களுக்குஇணையான ஊதியம் கேட்டு தீர்மானம்

/

மத்திய அரசு ஆசிரியர்களுக்குஇணையான ஊதியம் கேட்டு தீர்மானம்

மத்திய அரசு ஆசிரியர்களுக்குஇணையான ஊதியம் கேட்டு தீர்மானம்

மத்திய அரசு ஆசிரியர்களுக்குஇணையான ஊதியம் கேட்டு தீர்மானம்


ADDED : பிப் 21, 2025 01:18 AM

Google News

ADDED : பிப் 21, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசு ஆசிரியர்களுக்குஇணையான ஊதியம் கேட்டு தீர்மானம்

ராசிபுரம்:மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என, தமிழக ஆசிரியர் மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்துார் ஒன்றியங்களின் வட்ட கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சுப்ர மணியன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் முருகசெல்வராசன் இயக்க உரையாற்றினார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மத்திய அரசுப்பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் இடைநிலை, தொடக்க நிலை ஆசிரியருக்கு, 1.6.2006 முதல் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும்.

சட்டசபை தேர்தல் வாக்குறுதியின்படி, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை ஆசிரியர்களுக்கு தொடர்ந்து தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும்.தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாநில பணிமூப்பு முறையை திணிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர், -அரசு ஊழியர்களின் வாழ்வாதாரமான, 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வரும் 25ம் தேதி நாமக்கல் பூங்கா சாலையில் நடத்தும் மறியல் போராட்டத்தில், ராசிபுரம் வட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில், 250 ஆசிரியர்கள் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us