/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலரில் சென்ற வாலிபர்பள்ளத்தில் விழுந்து பலி
/
டூவீலரில் சென்ற வாலிபர்பள்ளத்தில் விழுந்து பலி
ADDED : மார் 10, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டூவீலரில் சென்ற வாலிபர்பள்ளத்தில் விழுந்து பலி
நாமக்கல்:திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்துார் அடுத்த உள்ளிகோட்டையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் மதன்குமார், 22. இவர், இறையம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில், இரண்டு ஆண்டுகளாக குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, 'ஹோண்டா' டூவீலரில் செங்கப்பள்ளியில் இருந்து இறையம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணைக்கு விளக்கை அணைக்க சென்றார். அங்கு வளைவில் வேகமாக சென்றபோது, தவறி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.