sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்குபட்டா வழங்க அளவீடு பணி தீவிரம்

/

புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்குபட்டா வழங்க அளவீடு பணி தீவிரம்

புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்குபட்டா வழங்க அளவீடு பணி தீவிரம்

புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்குபட்டா வழங்க அளவீடு பணி தீவிரம்


ADDED : மார் 21, 2025 01:52 AM

Google News

ADDED : மார் 21, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்குபட்டா வழங்க அளவீடு பணி தீவிரம்

ராசிபுரம்:தமிழகத்தில், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் நபர்களுக்கு, பட்டா வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும், 86,000 பேருக்கு இந்த திட்டத்தில் பட்டா வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என, வருவாய்துறைக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், முதல் கட்டமாக பயனாளிகளை வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., ஆகியோர் தேர்வு செய்து அனுப்பியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவில் வெண்ணந்துார் பகுதியில் அதிகபட்சமாக, 95 பேர் விண்ணப்பித்துள்ளனர். முத்துகாளிப்பட்டி ஊராட்சியில், 23 பேர், ராசிபுரம், 21, ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், 12, நாமகிரிப்பேட்டை, 14, அத்தனுார், 3, ஆர்.புதுப்பாளையம், 5, கட்டனாச்சினம்பட்டி, 22, பிள்ளாநல்லுார், 9, கோனேரிப்பட்டி, 39, சி.எஸ்.புரம், 46, அணைப்பாளையம், 1, அரியாகவுண்டம்பட்டி, 7, வெள்ளக்கல்பட்டியில், 5 பேர் என மொத்தம், 302 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் ராசிபுரம் நகராட்சியில், 60 பேர், நகராட்சியில் இருந்து, 8 கி.மீ., அப்பால் உள்ள பகுதியில், 97 பேர், டவுன் பஞ்சாயத்தில், 145 பேர் என பிரிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் கட்டமாக, குறிப்பிட்ட இடத்தில் குடியிருப்பவர்களுக்கு ஆட்சேபனை இல்லையா என்பதை, தாசில்தார் அளவிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தற்போது, பட்டா கேட்கப்படும் இடங்களை சர்வேயர் மூலம் அளவீடு செய்யும் பணி வேகமாக நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us