/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் ஷீரடி சாய் தத்தா பிருந்தாவனத்தில் பக்தர்கள் தரிசன
/
நாமக்கல்லில் ஷீரடி சாய் தத்தா பிருந்தாவனத்தில் பக்தர்கள் தரிசன
நாமக்கல்லில் ஷீரடி சாய் தத்தா பிருந்தாவனத்தில் பக்தர்கள் தரிசன
நாமக்கல்லில் ஷீரடி சாய் தத்தா பிருந்தாவனத்தில் பக்தர்கள் தரிசன
ADDED : ஏப் 04, 2025 01:12 AM
நாமக்கல்லில் ஷீரடி சாய் தத்தா பிருந்தாவனத்தில் பக்தர்கள் தரிசனம்
நாமக்கல்:பங்குனி வியாழனையொட்டி, நாமக்கல்லில் ஷீரடி சாய் தத்தா பிருந்தாவனத்தில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள, ஷீரடி சாய் தத்தா பிருந்தாவனத்தில் ராம நவமி, பிரதிஷ்டை தினம், குரு பூர்ணிமா, குரு ராகவேந்திரா ஆராதனை, விநாயகர் சதுர்த்தி, விஜய தசமி மற்றும் தத்தாத்ரேயர் ஜெயந்தி ஆகிய முக்கிய நாட்களிலும், ஒவ்வொரு வாரம் வியாழக்
கிமையும் சிறப்பு ஆரத்தி நடப்பது வழக்கம். அந்த வகையில், நேற்று பங்குனி வியாழக்கிழமையை முன்னிட்டு நேற்று காலை காகட ஆரத்தியும், அபி ேஷகம், பஜனை, கூட்டு பிரார்த்தனை, வேதங்கள் முழங்க பாபாவிற்கு மகா தீபாராதனை காண்பித்து மதியம் ஆரத்தி நடந்தது. மாலை துாப் ஆரத்தி, இரவு ஆரத்தி நடந்தது. ஏராளமான பக்தர்கள் ஷீரடி சாய் தத்தாவை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
வரும் 6ம் தேதி ராமநவமி மற்றும் சந்தன காப்பு விழா நடக்கிறது. அன்று காலை, 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி அபிேஷகம், அலங்காரம், மங்கள ஆரத்தி, சந்தனகாப்பு சமர்ப்பிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

