sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சிநிறுவனத்தில் நுால் வெளியீட்டு விழா

/

மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சிநிறுவனத்தில் நுால் வெளியீட்டு விழா

மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சிநிறுவனத்தில் நுால் வெளியீட்டு விழா

மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சிநிறுவனத்தில் நுால் வெளியீட்டு விழா


ADDED : ஏப் 05, 2025 01:21 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சிநிறுவனத்தில் நுால் வெளியீட்டு விழா

நாமக்கல்:நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், 'செயற்கை நுண்ணறிவும், இயற்பியல் கற்பித்தலும்' என்ற நுால் வெளியிட்டு விழா நடந்தது. முதுநிலை விரிவுரையாளர் வேலு வரவேற்றார். பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:

செயற்கை நுண்ணறிவானது, 1960ல், 'எலிசா' என்ற பெயரில் தொடங்கப்பட்டிருந்தாலும், இயற்பியல் கற்பித்தலுக்கான செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது என்பது, முதன்முறையாக கையாளப்படுவதால், கற்பித்தலுக்கான செயற்கை நுண்ணறிவை இணைக்கும் ஒரு தொடக்கப்புள்ளியாக இப்பயிற்சி இருக்கும்.

மேலும், செயற்கை நுண்ணறிவு பாடக்கருத்துக்களை விரிவாக்கவும், எடுத்துக்காட்டுகளை கொடுக்கவும், தற்போதைய நிகழ்வுகளை கூறவும், பாடப்பொருளின் வளர்ச்சிக்கு துணை செய்யவும், ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.கோவை, அரசு மகளிர் கல்வியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் மணிகண்டன் பேசுகையில், ''செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கு, பணிச்சுமை குறையும். கற்பித்தலை உயிரோட்டமுள்ளதாக மாற்றவும் முடியும்,'' என்றார்.

தொடர்ந்து, 'செயற்கை நுண்ணறிவும் இயற்பியல் கற்பித்தலும்' என்ற நுாலை, பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் வெளியிட, கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் மணிகண்டன் பெற்றுக்கொண்டார். சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் மற்றும் கருத்தாளர் பீட்டர் ஆனந்த், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us