/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வக்கீல்கள் நீதிமன்றபணி புறக்கணிப்பு
/
வக்கீல்கள் நீதிமன்றபணி புறக்கணிப்பு
ADDED : ஏப் 16, 2024 01:50 AM
குமாரபாளையம்:குமாரபாளையம் வக்கீல்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, குமாரபாளையம் வக்கீல்கள் சங்க தலைவர் சரவணராஜன் கூறியதாவது: குமாரபாளையம் நீதிமன்ற வளாகம், மூன்றரை ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. அப்போது முதல் வக்கீல்களுக்கு தனி ஓய்வு அறை வேண்டும். உணவு உண்ண அறை, ஆண், பெண் வக்கீல்களுக்கு தனித்தனி உடை மாற்றும் அறை இல்லாததால் பெறும் அவதி ஏற்படுகிறது. சங்க நிதியிலிருந்து இவற்றை அமைத்துக்கொள்ள அனுமதி தரவில்லை.பொதுமக்கள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதி, கழிப்பிடம் ஏற்படுத்தவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நீதிபதி அனுமதி தரவில்லை. இதனை கண்டித்து, ஏப்., 15 முதல் காலவரையற்ற நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

