/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லாலாப்பேட்டையில் வாழைத்தார்கள் விற்பனை
/
லாலாப்பேட்டையில் வாழைத்தார்கள் விற்பனை
ADDED : மே 31, 2024 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில், வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரகுமாரன்பட்டி, கள்ளப்பள்ளி, கருப்பத்துார், சிந்தலவாடி ஆகிய பகுதிகளில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழை சாகுபடிக்கு தேவையான தண்ணீர், வாய்க்கால் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. தற்போது அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள், லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
ரஸ்தாளி தார் ஒன்று, 350 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய், பூவன், 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வாழைத்தார்களை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.