sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகூட்ட தொடரில் அறிவிக்க ஆர்ப்பாட்டம்

/

கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகூட்ட தொடரில் அறிவிக்க ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகூட்ட தொடரில் அறிவிக்க ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகூட்ட தொடரில் அறிவிக்க ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 09, 2025 01:48 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகூட்ட தொடரில் அறிவிக்க ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி முன், கவுரவ விரிவுரையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் சத்தியபாமா தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுமதி, நிர்வாகி மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், நீதிமன்ற தீர்ப்புபடியும், அரசாணை, 56ன் படியும், இரு கட்டமாக கவுரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி பாதுகாப்புடன் கூடிய பணியிட மாறுதல் வழங்க வேண்டும். பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். அனைத்து கவுரவ விரிவுரையாளர்

களுக்கும் குழு காப்பீட்டு திட்டம் ஏற்படுத்திதர வேண்டும்.வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும். 41 பல்கலை உறுப்பு கல்லுாரிகளை அரசு கல்லுாரியாக மாற்றியபோது, அரசாணை, 36, 186ல் விடுபட்ட பாடப்பிரிவில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு புதிய அரசாணை வெளியிடவும், மாத நிலுவை ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும்.

பணிக்காலத்தில் இறந்த கவுரவ விரிவுரையாளர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை, தற்போது நடந்து வரும் சட்டசபை கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us