sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தமிழில் பெயர் பலகை இல்லையாவணிக நிறுவனங்களுக்கு அபராதம்

/

தமிழில் பெயர் பலகை இல்லையாவணிக நிறுவனங்களுக்கு அபராதம்

தமிழில் பெயர் பலகை இல்லையாவணிக நிறுவனங்களுக்கு அபராதம்

தமிழில் பெயர் பலகை இல்லையாவணிக நிறுவனங்களுக்கு அபராதம்


ADDED : ஏப் 11, 2025 01:19 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழில் பெயர் பலகை இல்லையாவணிக நிறுவனங்களுக்கு அபராதம்

ப.வேலுார்:-ப.வேலுார், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மூவேந்திர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. தமிழக அரசு அறிவித்துள்ள சட்டப்படி, அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெயர் பலகைகள், தமிழில் வைக்க வேண்டும். மேலும் பெயர் பலகையில், தமிழில் முதன்மையாகவும் பின் ஆங்கிலத்திலும், அதைத் தொடர்ந்து அவரவர் விரும்பும் மொழிகளில் அமைக்க வேண்டும்.

தமிழக அரசு உத்தரவுப்படி, ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்

சாலைகள், தனியார் பள்ளி கல்லுாரிகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். இதுவரை பெயர் பலகையை தமிழில் முதன்மையாக அமைக்கப்படாத நிறுவனங்கள், மே 15க்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதித்து, தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us