sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மழையால் தணிந்த வெயில் தாக்கம்மாவட்டத்தில் 191.50 மி.மீ., பதிவு

/

மழையால் தணிந்த வெயில் தாக்கம்மாவட்டத்தில் 191.50 மி.மீ., பதிவு

மழையால் தணிந்த வெயில் தாக்கம்மாவட்டத்தில் 191.50 மி.மீ., பதிவு

மழையால் தணிந்த வெயில் தாக்கம்மாவட்டத்தில் 191.50 மி.மீ., பதிவு


ADDED : மார் 13, 2025 01:48 AM

Google News

ADDED : மார் 13, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மழையால் தணிந்த வெயில் தாக்கம்மாவட்டத்தில் 191.50 மி.மீ., பதிவு

நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம், 191.50 மி.மீ., மழை பெய்தது. இந்த மழையால், வெயிலின் தாக்கம் தணிந்தது.

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கினர். நேற்று முன்தினம், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, சாரல் மழை பெய்தது. ஒரு சில இடங்களில், கன மழையும் பெய்தது. ஒரே நாளில், 191.50 மி.மீ., மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் நிம்மதியடைந்தனர். நேற்று முன்தினம் காலை, 6:00 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ.,ல்): குமாரபாளையம், 22.60, மங்களபுரம், 22.60, மோகனுார், 2, நாமக்கல், 15, ப.வேலுார், 4, புதுச்சத்திரம், 22, ராசிபுரம், 21.80, சேந்தமங்கலம், 18, திருச்செங்கோடு, 22, கலெக்டர் அலுவலகம், 11.50, கொல்லிமலை, 30 என, மொத்தம், 191.50 மி.மீ., மழை பெய்துள்ளது.

இதற்கிடையில், நேற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், மழை பெய்தது. குறிப்பாக, நாமக்கல் நகரம், கலெக்டர் அலுவலகம் பகுதி, மோகனுார் உள்பட பல்வேறு இடங்களில், லேசான மற்றும் கனமழை பெய்தது. இந்த மழை, அரை மணி நேரம் முதல், ஒரு மணி நேரம் வரை நீடித்தது.






      Dinamalar
      Follow us