sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்388 மனுக்கள் அளிப்பு; 6 பேருக்கு உதவி

/

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்388 மனுக்கள் அளிப்பு; 6 பேருக்கு உதவி

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்388 மனுக்கள் அளிப்பு; 6 பேருக்கு உதவி

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்388 மனுக்கள் அளிப்பு; 6 பேருக்கு உதவி


ADDED : மார் 04, 2025 01:28 AM

Google News

ADDED : மார் 04, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்388 மனுக்கள் அளிப்பு; 6 பேருக்கு உதவி

நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். முதியோர், விதவை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 388 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, 'மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

மேலும், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லுாரியில், 2ம் ஆண்டு இளங்கலை கணிதம் பயின்று வரும் மாணவி கீதாவுக்கு, தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து, லேப்டாப்பை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து, எம்.பி., ராஜேஸ்குமார், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஐந்து பேருக்கு, 35,800 ரூபாய் மதிப்பில், ஊன்று கோல், சக்கர நாற்காலி, காதொலி கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாநகராட்சி மேயர் கலாநிதி, எஸ்.பி., ராஜேஸ்குமார், டி.ஆர்.ஓ., சுமன், அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us