/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளி அருகே ஆபத்தான சாக்கடை
/
அரசு பள்ளி அருகே ஆபத்தான சாக்கடை
ADDED : ஏப் 06, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பள்ளி அருகே ஆபத்தான சாக்கடை
ராசிபுரம்:ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் யூனியன், கடந்தப்பட்டியில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவ, மணவியர் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும், கடந்தப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய குடும்பங்களை சேர்ந்தவர்கள். பள்ளியின் முன்பக்கம் காம்பவுண்ட் சுவரை ஒட்டியே, 2 அடி உயரத்திற்கு சாக்கடை கால்வாய் அமைந்துள்ளது.
இந்த கான்கிரீட் கால்வாயை மூடாமல் அப்படியே விட்டுள்ளனர். இந்த சாக்கடை கால்வாய் மேல் சிமென்ட் பலகை கொண்டு மூட வேண்டும்.

