/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விவேகானந்தா வித்யாபவன் பள்ளியில் பட்டமளிப்பு விழா
/
விவேகானந்தா வித்யாபவன் பள்ளியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 10, 2025 01:37 AM
விவேகானந்தா வித்யாபவன் பள்ளியில் பட்டமளிப்பு விழா
திருச்செங்கோடு:திருச்செங்கோடு, எளையாம்பாளையம் விவேகானந்தா வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. சேர்மன் கருணாநிதி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் வைகுண்ட ரத்தினம் வரவேற்றார். இணை செயலாளர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன் முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் குப்புசாமி, மழலையர்களுக்கு பட்டசான்றிதழ் வழங்கி பேசினார்.
அப்போது, 'குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும்' என, கேட்டுக்கொண்டார். பள்ளி பொறுப்பு ஆசிரியர் சங்கீதா, தொடக்கநிலை ஒருங்கிணைப்பாளர் சண்முகப்பிரியா மற்றும் உயர்நிலை ஒருங்கிணைப்பாளர் பிந்து ஆகியோர் வாழ்த்தினர்.

