sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புத்தக திருவிழா துவக்கம் 10 நாட்களுக்கு கோலாகலம்

/

புத்தக திருவிழா துவக்கம் 10 நாட்களுக்கு கோலாகலம்

புத்தக திருவிழா துவக்கம் 10 நாட்களுக்கு கோலாகலம்

புத்தக திருவிழா துவக்கம் 10 நாட்களுக்கு கோலாகலம்


ADDED : பிப் 01, 2025 12:48 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புத்தக திருவிழா துவக்கம் 10 நாட்களுக்கு கோலாகலம்

நாமக்கல்: தமிழக அரசு சார்பில், நாமக்கல் புத்தக திருவிழா இன்று துவங்கி, பத்து நாட்கள் நடக்கிறது.நாமக்கல் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, நுாலகத்துறை சார்பில், 'நாமக்கல் புத்தக திருவிழா', நாமக்கல்-பரமத்தி சாலை கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கி, 10 வரை, மொத்தம், 10 நாட்கள் நடக்கிறது.

தினமும் காலை, 10:00 முதல், இரவு, 9:00 வரை இந்த புத்தக திருவிழா மற்றும் கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியில், 80க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தினமும் மாலை தலைச்சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. புத்தக திருவிழாவில் புத்தகங்கள் வாங்குவோருக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இன்று மாலை, 6:00 மணிக்கு விழா துவங்குகிறது. கலெக்டர் உமா தலைமை வகிக்கிறார். எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், புத்தக திருவிழாவை துவக்கி வைத்து பேசுகிறார். டி.ஆர்.ஓ., சுமன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us