sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவடமாநில தொழிலாளர் 10 பேர் மீட்பு

/

வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவடமாநில தொழிலாளர் 10 பேர் மீட்பு

வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவடமாநில தொழிலாளர் 10 பேர் மீட்பு

வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவடமாநில தொழிலாளர் 10 பேர் மீட்பு


ADDED : மார் 30, 2025 01:45 AM

Google News

ADDED : மார் 30, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவடமாநில தொழிலாளர் 10 பேர் மீட்பு

திருச்செங்கோடு:திருச்செங்கோடு அடுத்த சீனிவாசம்பாளையத்தில், வடமாநில தொழிலாளர்களை வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக, எஸ்.பி., ராஜேஸ்கண்ணனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, திருச்செங்கோடு டி.எஸ்.பி., கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் தீபா, வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது, ஒருவீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் நயடீப் பீகாரா, 46, பினய்தாஸ், 38, டிப்பு பீகாரா, 35, ராஜேஸ் பயூரி, 35, டீப்நாத் பயூரி, 25, ஜீட்டன் நீகாரா, 50, மற்றும் சிறுவர்கள் நான்கு பேர் என, மொத்தம், 10 பேரை மீட்டனர். அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று உணவு, உடை கொடுத்து சொந்த மாநிலத்துக்கு செல்ல, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருச்செங்கோடு போலீசார், வடமாநில தொழிலாளர்களை வீட்டில் அடைத்து வைத்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us