sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு துவக்கம் மாவட்டத்தில் 19,038 மாணவர்கள் பங்கேற்பு

/

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு துவக்கம் மாவட்டத்தில் 19,038 மாணவர்கள் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு துவக்கம் மாவட்டத்தில் 19,038 மாணவர்கள் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு துவக்கம் மாவட்டத்தில் 19,038 மாணவர்கள் பங்கேற்பு


ADDED : பிப் 25, 2025 04:44 AM

Google News

ADDED : பிப் 25, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான செய்முறை தேர்வு, நேற்று துவங்கியது. வரும், 28 வரை நடக்கும் இத்தேர்வில், 295 பள்ளிகளை சேர்ந்த, 19,038 மாணவ, மாணவியர் பங்கேற்கின்-றனர்.

தமிழகத்தில், அரசு பொதுத்தேர்வு, பிளஸ் 2விற்கு, வரும் மார்ச், 3ல் தொடங்கி, 25 வரையும், பிளஸ் 1 வகுப்பிற்கு, மார்ச், 5ல் தொடங்கி, 27 வரையும், பத்தாம் வகுப்பிற்கு, மார்ச், 28ல் தொடங்கி, ஏப்., 15 வரையும் நடக்கிறது. முன்னதாக, பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்பிற்கான செய்முறை தேர்வு முடிந்துள்ளது.

அதில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, கடந்த, 7ல் துவங்கி, 14 வரையும், பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, கடந்த, 15ல் தொடங்கி, 21 வரையும் நடந்தது.அத்தேர்வில், பிளஸ் 2வில், 14,402 மாணவர்களும், பிளஸ் 1ல், 14,569 மாணவ, மாணவியரும் பங்கேற்கின்றனர். இந்த செய்-முறை தேர்விற்காக, மாவட்டம் முழுவதும், 148 மையங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான செய்முறை தேர்வு, நேற்று துவங்கி-யது. இத்தேர்வு, வரும், 28 வரை நடக்கிறது. அதற்காக, 148 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை, அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக், சுயநிதி என, மொத்தம், 295 பள்ளிகளை சேர்ந்த, 10,005 மாணவர்கள், 9,033 மாணவியர் என, மொத்தம், 19,038 பேர் பங்கேற்கின்றனர். அவர்களுக்காக, 92 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us