sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காளியம்மன் கோவிலில் குண்டம் விழா5,000 பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

/

காளியம்மன் கோவிலில் குண்டம் விழா5,000 பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

காளியம்மன் கோவிலில் குண்டம் விழா5,000 பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

காளியம்மன் கோவிலில் குண்டம் விழா5,000 பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்


ADDED : மார் 06, 2025 01:40 AM

Google News

ADDED : மார் 06, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காளியம்மன் கோவிலில் குண்டம் விழா5,000 பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

குமாரபாளையம்:குமாரபாளையம் காளியம்மன் கோவில் குண்டம் விழாவில், 5,000 பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

குமாரபாளையத்தில் பழமைவாய்ந்த காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மகா குண்டம் மற்றும் தேர் திருவிழா, கடந்த, 18ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 25ல் மறு பூச்சாட்டுதல், 27ல் கொடியேற்றம் நடந்தது. விழாவின், 15ம் நாளான நேற்று, முக்கிய நிகழ்வான குண்டம் விழா நடந்தது. இதில், 15 நாட்களாக விரதம் மேற்கொண்ட பக்தர்கள், இன்று அதிகாலை காவிரியில் புனித நீராடினர். பின், சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கோவிலின் தலைமை பூசாரி சதாசிவம், பூங்கரகத்துடன் கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, தீ மிதித்தார்.

இதையடுத்து, பூசாரிகள் சண்முகம், சண்முகசுந்தரம், கார்த்தி, இன்ஸ்பெக்டர் தவமணி உள்பட, 5,000க்கும் மேற்பட்டோர், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிலர், கைக்குழந்தைகளுடனும், அலகு குத்தியபடியும் குண்டம் இறங்கினர். மாலை, பக்தர்கள் பெரும்பாலானோர், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

போலீசார், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us