sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விநாயகர் சிலை வைக்க ஆலோசனை

/

விநாயகர் சிலை வைக்க ஆலோசனை

விநாயகர் சிலை வைக்க ஆலோசனை

விநாயகர் சிலை வைக்க ஆலோசனை


ADDED : செப் 07, 2024 07:44 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: விநாயகர் சதுர்த்தி விழா, இன்று கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில், விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம், டி.எஸ்.பி., இமயவரம்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அப்போது அவர் கூறியதாவது: சிலைகள் பீடத்துடன் சேர்த்து, 10 அடி வரை மட்டுமே இருக்க வேண்டும். சிலை வைக்கும் இடத்தின் உரிமையாளர் அனுமதி பெற வேண்டும். மின் திருட்டில் ஈடுபடக்கூடாது. பிளாஸ்டிக், மற்றும் ரசாயன கலவையால் ஆன சிலைகள் வைக்க கூடாது. ஜெனரேட்டர் வைக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், சிலை அருகே வைக்க கூடாது. தீப்பற்றாத பந்தல் அமைக்க வேண்டும். பிற மதத்தினர் கோவில்கள், பள்ளிகள் அருகில் வைக்க கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அமைக்க கூடாது. பெட்டி வடிவிலான ஒலி பெருக்கிகள் மட்டும் வைக்க வேண்டும். விநாயகர் ஊர்வலங்கள் பிற மத கோவில்கள் வழியாக வரக்கூடாது. விழாக்குழுவினர் பாதுகாப்பு குழு அமைத்து, சிலை பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.,க்கள் குணசேகரன், ராம்குமார், மாதேஸ்வரன் உள்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us