/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அர்த்தநாரீசுவரர் நகர் வீட்டு மனைகள் விற்பனை துவக்கம்
/
அர்த்தநாரீசுவரர் நகர் வீட்டு மனைகள் விற்பனை துவக்கம்
அர்த்தநாரீசுவரர் நகர் வீட்டு மனைகள் விற்பனை துவக்கம்
அர்த்தநாரீசுவரர் நகர் வீட்டு மனைகள் விற்பனை துவக்கம்
ADDED : செப் 04, 2024 09:30 AM
திருச்செங்கோடு: ஸ்ரீ லேண்ட் மார்க் நிறுவனத்தின் அங்கமான, அர்த்தநாரீசுவரர் நகர் வீட்டு மனைகள் விற்பனை துவக்க விழா நாளை (வியாழக்கிழமை) காலை 9:00 மணியளவில் மனை அமைந்துள்ள பகுதி-யான திருச்செங்கோடு ஒ.ராஜபாளையம் அர்த்த-நாரீசுவரர் நகரில் நடைபெறுகிறது.
ஸ்ரீ லேண்ட் மார்க் நிறுவன தலைவர் அங்கமுத்து தலைமை வகிக்கிறார். சிறப்பாளராக தமிழ்நாடு ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிறுவனர் முனைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் கலந்து கொள்கிறார். சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவே-கானந்தன், ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்-காணிப்பாளர் ராஜூ, ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் சுப்ரமணியம், திருச்செங்-கோடு ஜெய்சக்தி குரூப் கம்பெனிகளின் நிர்வாக இயக்குனர் செந்தில்வடிவேலன், திருப்பூர் டெக்னோ ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் அசோக்-குமார், சேலம் பைரவ் எலக்ட்ரிக்கல்ஸ் உரிமை-யாளர் மகேஷ்குமார் போர்வால் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். எல்.ஐ.சி., வீட்டு வசதி நிதி நிறுவனம், சேர்மன் கிளப் மெம்பர் மணி-வண்ணன் நன்றி கூறுகிறார்.
ஸ்ரீ லேண்ட் மார்க் நிறுவன தலைவர் அங்கமுத்து கூறியதாவது: திருச்செங்கோட்டில் அர்த்தநாரீசு-வரர் நகர், நகராட்சி பகுதிக்கு அருகில் உள்ளது. சுற்றிலும் வீடுகள், வீட்டு மனைகளுக்கு மத்-தியில் மனை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 50, 40, 33, 30, 23 அடி அகலமுள்ள தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மட்ட குடிநீர் தொட்டி அமைக்கப்-பட்டுள்ளது. மனையை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. தனித்தனி வில்லா வீடுகளும் கட்டித்தரப்படுகிறது. மனை வாங்கும் விலையில், 70 சதவீத வங்கி கடன் வசதி, வில்லா வீடுகளுக்கு, 90 சதவீத வங்கி கடன் வசதி செய்து தரப்படும். இவ்வாறு கூறினார்.