/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அண்ணனை வெட்டிய தம்பி சிறையில் அடைப்பு
/
அண்ணனை வெட்டிய தம்பி சிறையில் அடைப்பு
ADDED : செப் 11, 2024 06:45 AM
மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு அருகே, வட்டூர்பெத்தாம்பட்டி, அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 44; கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் அவரது பெரியப்பா மகன் தங்கராஜ். 38. இந்-நிலையில், தங்கராஜ், நேற்று முன்தினம் திருமணத்திற்கு செல்ல, மாதேஸ்வரனிடம் அவரது டூவீலரை கேட்டு வாங்கி சென்-றுள்ளார். பின், டூவீலரை திருப்பி தரும்போது கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்ட நிலையில் கொடுத்துள்ளார்.
இதனால், இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்-ளது. கோபமடைந்த தங்கராஜ், மாதேஸ்வரனை அரிவாளால் தோள்பட்டையில் வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த அவரை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார், தங்-கராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட, 3 பிரிவுகளில் வழக்குப்ப-திவு செய்து, நேற்று திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.