/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மனித கழிவு பூசிய விவகாரம் போலீசார் தீவிர விசாரணை
/
மனித கழிவு பூசிய விவகாரம் போலீசார் தீவிர விசாரணை
ADDED : செப் 04, 2024 09:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: அரசு துவக்கப்பள்ளி சத்துணவு கூட சுவரில், மனித கழிவை பூசிய சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வரு-கின்றனர்.
எருமப்பட்டி டவுன் பஞ்., அம்பேத்கர் நகரில் உள்ள அரசு துவக்கப்பள்ளி வளாகத்-துக்குள் புகுந்த மர்மநபர்கள், அங்குள்ள சத்துணவு கூட சுவரில் மனித கழிவை பூசி அட்டூழியம் செய்துவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் தனலட்சுமி அளித்த புகார்-படி, எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.