/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடிநீர் குழாய் பதிக்கும் பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்
/
குடிநீர் குழாய் பதிக்கும் பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்
குடிநீர் குழாய் பதிக்கும் பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்
குடிநீர் குழாய் பதிக்கும் பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்
ADDED : ஜூலை 02, 2024 06:54 AM
வெண்ணந்துார் : வெண்ணந்துார் அருகே, அத்தனுார் டவுன் பஞ்சாயத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, சாலையோரத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்-டப்பட்டு, குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நி-லையில் அங்கு, குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. 'மாற்-றுப்பாதையில் செல்லவும்' என்பதை வாகன ஓட்டிகளுக்கு தெரி-விக்கும் வகையில் அறிவிப்பு பலகை எதுவும் வைக்கப்பட-வில்லை.
இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் மண் சறுக்கி விட்டு நிலைதடுமாறி கீழே விழும் சூழ்நிலை ஏற்பட்டு வருகி-றது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். அவசர பணிக்கு செல்பவர்கள், ஆம்புலன்சில் செல்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே அங்கு அறிவிப்பு பலகை வைக்கவும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.