sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குடியிருந்த வீட்டை இடித்து அகற்றியதால் ஆர்.ஐ., ஆபீசில் குடியேறிய தொழிலாளி

/

குடியிருந்த வீட்டை இடித்து அகற்றியதால் ஆர்.ஐ., ஆபீசில் குடியேறிய தொழிலாளி

குடியிருந்த வீட்டை இடித்து அகற்றியதால் ஆர்.ஐ., ஆபீசில் குடியேறிய தொழிலாளி

குடியிருந்த வீட்டை இடித்து அகற்றியதால் ஆர்.ஐ., ஆபீசில் குடியேறிய தொழிலாளி


ADDED : ஜூலை 07, 2024 01:04 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார் : வெண்ணந்துார் டவுன் பஞ்.,க்குட்பட்ட தங்க சாலை வீதியை சேர்ந்தவர் துரைசாமி, 68. தாய் பாப்பம்மாள், 80. மனைவி கன-காம்பாள், 50. தம்பதியருக்கு சங்கீதா, 37, என்ற மகள், நாகராஜ், 35, உதயகுமார், 30, கண்ணன், 24, என, மூன்று மகன்கள் உள்-ளனர். துரைசாமி கூலி வேலை செய்து வருகிறார்.

துரைசாமிக்கு, கடந்த, 40 ஆண்டுக்கு முன் அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த, 1-ல் துரைசாமி குடியிருந்த வீட்டை வருவாய் துறையினர் இடித்து அகற்றினர். இதனால் வசிக்க வீடில்லாமல் தவித்த துரை-சாமி, குடும்பத்தினருடன், நேற்று, வெண்ணந்துார் ஆர்.ஐ., அலு-வலகத்தில் குடியேறினார். தகவலறிந்து வந்த போலீசார், துரை-சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதனால், ஆர்.ஐ., அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்-டது.இதுகுறித்து, துரைசாமி கூறுகையில், ''அரசால் வழங்கப்பட்ட இடத்தில், 40 ஆண்டாக வீடு கட்டி வசித்து வந்தேன். அதற்கு வீட்டு வரி, இதர அரசு வரிகளை முறையாக செலுத்தி வரு-கிறேன். ஆனால், எந்த அறிவிப்பும் இன்றி வீட்டை இடித்ததால், ஆர்.ஐ., அலுவலகத்தில் குடும்பத்துடன் குடியேறினேன். எனக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுப-டுவேன்,'' என்றார்.

ராசிபுரம் தாசில்தார் சரவணன் கூறுகையில், ''அரசால் ஒதுக்கப்-பட்ட இடத்தில் துரைசாமி வீடு கட்டி வசித்து வருகிறார். ஆனால், மற்றொருவர் வீட்டிற்கு செல்லும் பாதையை மறைத்து வீடு கட்டியதால், சம்பந்தப்பட்ட நபர் மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் மாநில தாழ்த்-தப்பட்டோர் ஆணையம், பாதையில் உள்ள வீட்டை அகற்ற உத்-தரவு வழங்கியது. இதையடுத்து வீடு முறையாக அறிவிப்பு செய்து இடிக்கப்பட்டது,'' என்றார்.






      Dinamalar
      Follow us