sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

திருப்பாற்குளத்தை சீரமைக்க கோரிக்கை

/

திருப்பாற்குளத்தை சீரமைக்க கோரிக்கை

திருப்பாற்குளத்தை சீரமைக்க கோரிக்கை

திருப்பாற்குளத்தை சீரமைக்க கோரிக்கை


ADDED : பிப் 28, 2025 01:46 AM

Google News

ADDED : பிப் 28, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாற்குளத்தை சீரமைக்க கோரிக்கை

நாமக்கல்:'பராமரிப்பின்றி, புதர் மண்டி காணப்படும் திருப்பாற்குளத்தை சீரமைப்பு செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற நாமகிரி தாயார் கோவில் உள்ள. இக்கோவில் அருகே, திருப்பாற்குளம் உள்ளது. அந்த குளம் பயன்பாடின்றி சேரும், சகதியுமாக காணப்பட்டது. இந்நிலையில், 2014-15ல், அப்போதைய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பாஸ்கர் முயற்சியில், புனரமைக்கப்பட்டது. இதற்காக, குளத்தில் இருந்த சேறும், சகதியும் அப்புறப்படுத்தப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டது. இதையடுத்து, அங்கு பூங்கா அமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இதற்கிடையே ஆட்சி மாற்றம் காரணமாக, பூங்கா முறையாக பராமரிக்காமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, புதர் மண்டியும், மக்கள் பயன்பாடின்றி, பூட்டிக்கிடக்கிறது. இது, அப்பகுதி பொதுமக்களை கடும் அதிர்ச்சியும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

'நாமக்கல் நகராட்சியாக இருந்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நகரின் மையத்தில் அமைந்துள்ள திருப்பாற்குளத்தை முறையாக பராமரித்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us