ADDED : பிப் 28, 2025 01:47 AM
முத்தங்கியில் ஜொலித்த ஆஞ்சநேயர்
நாமக்கல்:மாசி அமாவாசை தினமான நேற்று, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி முத்தங்கியில் ஜொலித்தார்.நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமி, நின்றபடி சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்பு, தமிழ் மாத முதல் ஞாயிறு உள்ளிட்ட முக்கிய தினங்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அதன்படி, மாசி மாத அமாவாசை தினமான நேற்று காலை, 10:00 மணிக்கு சுவாமிக்கு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, முத்தங்கி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.