ADDED : மார் 08, 2025 01:28 AM
அ நிறம் | அளவு
தேனீ வளர்க்க பயிற்சிநாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கார்கூடல்பட்டி, மலையாம்பட்டி கிராமத்தில் திருச்செங்கோடு காந்தி ஆஸ்ரமம் சார்பில், விவசாயிகளுக்கு தேனீ வளர்க்க பயிற்சி வழங்கப்பட்டது. காதி மற்றும் கிராம தொழில் வளர்ச்சி நிறுவனம், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
கார்கூடல்பட்டி பகுதியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். தேனீ பெட்டி மூலம் தேனீ வளர்ப்பது, அதை பாதுகாக்கும் முறை, தேனை எடுப்பது உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
