ADDED : மார் 26, 2025 02:19 AM
அ நிறம் | அளவு
எஸ்.பி., அலுவலகத்தில்குற்ற கலந்தாய்வு கூட்டம்
கரூர்:கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
அதில், கொலை வழக்குகள், வழிப்பறி குற்றவாளிகள், ரவுடிகள், திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது குறித்து, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா விளக்கம் அளித்து பேசினார். அதை தொடர்ந்து, குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு, சான்றுகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில், ஏ.டி.எஸ்.பி., பிரேம் ஆனந்தன், டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், முத்துக்குமார், ஜெயராமன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
