/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடிநீர் இணைப்பில் மீட்டர் பொருத்தம்
/
குடிநீர் இணைப்பில் மீட்டர் பொருத்தம்
ADDED : ஏப் 06, 2025 01:06 AM
குடிநீர் இணைப்பில் மீட்டர் பொருத்தம்
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்தில் குடிநீர் இணைப்பில் மீட்டர் வால்வு பொருத்தும் பணி தொடங்கியது.
ராசிபுரம் நகராட்சி, வெண்ணந்துார், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் காவிரி நீர் வழங்கும் திட்டம், 850 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பணிகள் முடிந்து இன்னும் சில நாட்களில் சோதனையோட்டம் நடக்கவுள்ளது. நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்தில் ஏற்கனவே, 2,600க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. இதில் பல பகுதிகளில் மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுவதாக புகார் வந்தது. இந்நிலையில் கூட்டு குடிநீர் இணைப்பு வழங்கும்போது, மீட்டர் மட்டும் மோட்டார் பொருத்துவதை தடுக்க வால்வு பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு சோதனையோட்டமாக தேவஸ்தானம் புதுார் பகுதியில் உள்ள குடிநீர் இணைப்புகளில், நேற்று வால்வு மற்றும் மீட்டர் பொருத்தும் பணி தொடங்கியது.
சோதனையோட்டமாக நடக்கும் இந்த பணியை அடுத்து தேவஸ்தானம் புதுார் பகுதியில் உள்ள குடிநீர் இணைப்புகளில், நேற்று மீட்டர் வால்வு பொருத்தும் பணி தொடங்கியது.

