/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையில் வெள்ளைக்கோடுவரையும் பணி தீவிரம்
/
சாலையில் வெள்ளைக்கோடுவரையும் பணி தீவிரம்
ADDED : ஏப் 06, 2025 01:06 AM
சாலையில் வெள்ளைக்கோடுவரையும் பணி தீவிரம்
ராசிபுரம்:ராசிபுரம் நெடுஞ்சாலைத்துறையில், ஒருகிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது. ராசிபுரத்தில் இருந்து ஆத்துார் செல்லும் பிரதான சாலையில் காக்காவேரியில் இருந்து சீராப்பள்ளி வரை, 3.371 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த, ஏழு மீட்டர் அகல சாலை, 10 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது சாலை அகலமாக இருப்பதால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. சாலையில் வெள்ளை கோடுகள் வரையாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில், நேற்று காக்காவேரியில் இருந்து சீராப்பள்ளி வரை சாலையோரம் மற்றும் மத்திய பகுதியில் வெள்ளை கோடுகள் வரையும் பணி தொடங்கியது.