/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெருமாள் கோவில்களில்பக்தர்கள் சிறப்பு வழிபாடு
/
பெருமாள் கோவில்களில்பக்தர்கள் சிறப்பு வழிபாடு
ADDED : ஏப் 06, 2025 01:09 AM
பெருமாள் கோவில்களில்பக்தர்கள் சிறப்பு வழிபாடு
குமாரபாளையம்:பங்குனி மாத சனிக்கிழமையான நேற்று, குமாரபாளையம் விட்டலபுரி, பாண்டுரங்கர் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது.
இதேபோல் ராமர் கோவில், அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், திருவள்ளுவர் நகர் சவுந்திரராஜ பெருமாள் கோவில், விட்டலபுரி ராமர் கோவில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

