ADDED : மார் 27, 2026 06:06 AM

மல்லசமுத்திரம்:வையப்பமலை,
மகாமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்கள்
பூசாரியிடம் சாட்டையடி வாங்கிய வினோத வழிபாடு நடந்தது.
மல்லசமுத்திரம்
அருகே, வையப்பமலை மலைக்குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி
பெற்ற மகாமாரியம்மன் கோவிலில், கடந்த 17ல் கம்பம் நடப்பட்டு விழா
தொடங்கியது. நேற்றுமுன்தினம் காலை 8:00மணிக்கு தீர்த்தக்குடம்
ஊர்வலம் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு பக்தர்கள் கோவில்
பூசாரியிடம் சாட்டையடி வாங்கும் வினோத வழிபாடு நடந்தது. இதில்,
ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று பூசாரியிடம் சாட்டையால் அடி
வாங்கினர்.
மாலை 3:00 மணிக்கு அக்னிசட்டி, முளைப்பாரி ஊர்வலம்,
மேளக்கச்சேரி, நையாண்டி, கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள்
நடந்தன. இன்று காலை 7:30க்கு பொங்கல் வைபவம் நடைபெறுகிறது. மாலை 3:00
மணிக்கு அம்மன் ஊர்வலம், அலகு குத்துதல் நடைபெறும். ஏற்பாடுகளை
விழாகுழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.
