/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மீனவர்கள், மீன் வளர்ப்போருக்கு 10ல் கடன் அட்டை வழங்கும் முகாம்
/
மீனவர்கள், மீன் வளர்ப்போருக்கு 10ல் கடன் அட்டை வழங்கும் முகாம்
மீனவர்கள், மீன் வளர்ப்போருக்கு 10ல் கடன் அட்டை வழங்கும் முகாம்
மீனவர்கள், மீன் வளர்ப்போருக்கு 10ல் கடன் அட்டை வழங்கும் முகாம்
ADDED : செப் 07, 2024 07:52 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மீனவர்கள், மீன் வளர்ப்போருக்கு கடன் அட்டை வழங்கும் முகாம், வரும், 10ல் தொடங்குகிறது என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில் உள்நாட்டு மீன்பிடிப்பு பகுதிகளில் ஈடுபடும் மீனவர்கள், மீன் வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு, மத்திய அரசு உத்தரவுப்படி விவசாய கடன் அட்டை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், மீன் பண்ணைகள், பண்ணை குட்டைகள், புதிதாக அமைத்தல் மற்றும் புனரமைத்தல், நீர்த்தேக்கம், குளங்களில் மீன்குஞ்சு இருப்பு செய்து வளர்த்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்கள் வளர்த்தல், பண்ணை குட்டையில் மீன் குஞ்சுகள் வளர்த்தல், கூண்டுகளில் மீன் வளர்த்தல், மீன் விற்பனை செய்பவர்கள், பரிசல் உரிமையாளர்கள், வண்ண மீன் வளர்ப்போர், கருவாடு விற்பனை செய்பவர்கள் இதர மீன்வள திட்டங்களுக்கும் விவசாய கடன் அட்டையானது வழங்கப்படவுள்ளது.
மீனவர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளிலேயே, இந்த கடன் அட்டை பெறலாம். இதற்கு ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கி கணக்கு நகல், புகைப்படம், மீனவர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பரிசல் இருந்தால் அதற்கான உரிமைச்சான்று நகல் ஆகியவை கொண்டு வர வேண்டும். விவசாய கடன் அட்டை வழங்கும் முகாம் வரும், 10ல் பள்ளிப்பாளையம் நகராட்சி, ஆவாரங்காடு சமுதாய கூடத்திலும், 11ல், பரமத்தி வேலுார், கவுண்டம்பாளையம் டவுன் பஞ்., சமுதாய கூடத்திலும் நடக்கிறது. இதில், மீனவர்கள், மீன வளர்ப்போர் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.