sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரேஷன் குறைதீர் முகாம்140 மனுக்களுக்கு தீர்வு

/

ரேஷன் குறைதீர் முகாம்140 மனுக்களுக்கு தீர்வு

ரேஷன் குறைதீர் முகாம்140 மனுக்களுக்கு தீர்வு

ரேஷன் குறைதீர் முகாம்140 மனுக்களுக்கு தீர்வு


ADDED : பிப் 09, 2025 01:28 AM

Google News

ADDED : பிப் 09, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரேஷன் குறைதீர் முகாம்140 மனுக்களுக்கு தீர்வு

நாமக்கல்:பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாமில், மாவட்டத்தில் உள்ள, 8 தாலுகா அலுவலகத்தில், 140 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோகத்திட்டம் மூலம், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன்கார்டு கோருதல், மொபைல் போன் எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள, பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், ஒவ்வொரு மாதமும், இரண்டாவது சனிக்கிழமை நடத்தப்படுகிறது.

அதன்படி, இம்மாதத்திற்கான பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார், குமாரபாளையம் என, எட்டு தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் நடந்தது. அந்தந்த வட்ட வழங்கல் தாசில்தார் தலைமை வகித்தனர். நாமக்கல் தாலுகாவில், வட்ட வழங்கல் தாசில்தார் கோவிந்தசாமி தலைமையில் நடந்த முகாமில், ஏராளமான பொதுமக்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், மொபைல் போன் சேர்த்தல் குறித்த மனுக்களை அளித்தனர். மாவட்டம் முழுவதும், 8 தாலுகாவில் நடந்த முகாமில், 140 மனுக்கள் வரப்பெற்றன. அவை அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டன.






      Dinamalar
      Follow us