sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த25 பவுன் கட்டியாக மீட்பு: 2 பேர் கைது

/

ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த25 பவுன் கட்டியாக மீட்பு: 2 பேர் கைது

ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த25 பவுன் கட்டியாக மீட்பு: 2 பேர் கைது

ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த25 பவுன் கட்டியாக மீட்பு: 2 பேர் கைது


ADDED : பிப் 08, 2025 12:48 AM

Google News

ADDED : பிப் 08, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த25 பவுன் கட்டியாக மீட்பு: 2 பேர் கைது

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, ஆசிரியர் வீட்டில், 25 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து தங்க கட்டியை பறிமுதல் செய்தனர்.

ராசிபுரம், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அழகப்பன், 62; ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர். இவரது மனைவி சுப்புலட்சுமி, 55; இவர், அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த, ஆறு மாதத்திற்கு முன், வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகளை பார்க்க தம்பதியர் சென்றனர். அப்போது, ஆளில்லாத வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், வீடு முழுவதும் மிளகாய் பொடியை துாவி, 25 பவுன் நகையை

கொள்ளையடித்து சென்றனர்.இதுகுறித்து, ராசிபுரம் போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சியை சேர்ந்த குமார் மகன் ராஜசேகரன், 31, மதுரையை சேர்ந்த ஜெயமணி மகன் மகேந்திரன், 33, ஆகிய இருவரும் ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும், ராஜசேகரன், திருச்சி மத்திய சிறையிலும், மகேந்திரன் புதுக்கோட்டை சிறையிலும் இருப்பது தெரியவந்தது.

அவர்கள் இருவரையும் கஸ்டடி எடுத்த ராசிபுரம் போலீசார் விசாரித்தனர். அதில், ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த நகைகளை உருக்கி, தங்க கட்டி யாக வைத்திருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை மீண்டும் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us