ADDED : ஆக 01, 2024 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் பகுதியில் செயல்படும் கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம், சின்னசோளம், செஞ்சோளம், கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும், ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, அரிசி, சக்கரை உள்ளிட்ட உணவு பொருட்களும், பெரும்பாலும் வடமாநிலங்-களில் இருந்து சரக்கு ரயிலில் வரவழைக்கப்படுகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களான, 2,600 டன் சின்னசோளத்தை தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டன. அங்கிருந்து, 90 லாரிகளில் ஏற்றி, கோழித்தீவன அரவை ஆலை குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டன.