/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் அனுமதி பெற கால அவகாசம் நீட்டிப்பு
/
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் அனுமதி பெற கால அவகாசம் நீட்டிப்பு
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் அனுமதி பெற கால அவகாசம் நீட்டிப்பு
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் அனுமதி பெற கால அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஆக 08, 2024 06:29 AM
நாமக்கல்: 'அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு அனுமதி பெற, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்-டத்தில், திட்டமில்லா பகுதிகளில், 2011 ஜன., 1க்கு முன், கட்-டப்பட்டு இயங்கி வரும், அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்-களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இணையத-ளத்தில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், கடந்த, 1 முதல், 2025 ஜன., 31 வரை, 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்து, தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்-துறை உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்ட-டங்கள், மலையிடப்பகுதியில் அமையும்பட்சத்தில், அரசு உத்த-ரவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். மேலும், இந்த இறுதி வாய்ப்பை தவறாது பயன்படுத்தி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.