/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜல்லி பெயர்ந்த தார்ச்சாலை சிரமத்துக்குள்ளாகும் மக்கள்
/
ஜல்லி பெயர்ந்த தார்ச்சாலை சிரமத்துக்குள்ளாகும் மக்கள்
ஜல்லி பெயர்ந்த தார்ச்சாலை சிரமத்துக்குள்ளாகும் மக்கள்
ஜல்லி பெயர்ந்த தார்ச்சாலை சிரமத்துக்குள்ளாகும் மக்கள்
ADDED : பிப் 25, 2025 04:48 AM
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, தொண்டிப்பட்டி பஞ்., குமரவேலிபா-ளையத்தில் உள்ள தார்ச்சாலை, ஆறு ஆண்டுகளாக ஜல்லிக்-கற்கள் பெயர்ந்து, 2 கி.மீ., தொலைவிற்கு ஆங்காங்கே ஜல்லிக்-கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. பல்வேறு கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலை என்பதால், எண்ணற்ற மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வாறு செல்லும் வாகன ஓட்டிகள், இச்சாலையில் செல்லும்-போது தடுமாறுகின்றனர். சற்று வேகமாக சென்றால் கூட பள்-ளத்தில் விழுந்து காயத்துடன் செல்கின்றனர். குறிப்பாக, மாண-வர்கள், தங்கள் சைக்கிளில் புத்தக பைகளை எடுத்து செல்லும்-போது, பாதி வழியில் விழுந்து விடுகிறது. இதனால் பள்ளிக்கு செல்ல கால விரயம் ஏற்படுகிறது. எனவே, ஜல்லி பெயர்ந்துள்ள தார்ச்சாலையை சரிசெய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.