/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ. 28 ஆயிரத்துக்கு பட்டுக்கூடு ஏலம்
/
ரூ. 28 ஆயிரத்துக்கு பட்டுக்கூடு ஏலம்
ADDED : ஆக 31, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 53.7 கிலோ பட்டுக்கூடு, 28 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டு கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசா-யிகள் ராசிபுரத்திற்கு வந்து, பட்டு கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 53.7 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. அதிகபட்சமாக கிலோ, 525 ரூபாய், குறைந்தபட்சமாக, 501 ரூபாய், சராசரியாக கிலோ, 519 ரூபாய்க்கு விற்பனையானது. 53.7 கிலோ பட்டு கூடு, 28 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.