ADDED : ஆக 26, 2024 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: குமாரபாளையம் அடுத்த ஓலப்பாளையம், பாசம் அறக்கட்டளை சார்பில், ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான, சிவகிரி செங்குந்தம் வள்ளி கும்மி ஆட்ட குழுவினரின் கலை நிகழ்ச்சி நடந்தது. தளிர்விடும் பாரதம் அறக்கட்டளை செய-லாளர் பிரபு வரவேற்றார். 'வள்ளி கும்மி ஆட்டத்தை போற்-றுவோம், தமிழர் பாரம்பரிய கலையை போற்றுவோம்' என்ற தலைப்பில், தமிழ் சிந்தனை பேரவை தலைவர் ரமேஷ்குமார் சிறப்புரையாற்றினார்.
முதியவர்கள் அனைவரும், வள்ளி கும்மி ஆட்ட குழுவினருடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தனர். வள்ளி கும்மி குழுவின-ருக்கு, போலீஸ் எஸ்.ஐ., ராம்குமார், பேரவை நிர்வாகி பராசக்தி ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். இல்ல பொறுப்பாளர்கள் முருகேசன், தீபா, பத்மா, நந்தகுமார், பாரதம் அறக்கட்டளை தலைவர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

