/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாய் பாபா கோவிலில் இன்று வருஷாபிஷேக விழா
/
சாய் பாபா கோவிலில் இன்று வருஷாபிஷேக விழா
ADDED : செப் 07, 2024 07:50 AM
ப.வேலுார்: பரமத்தி அருகே, தொட்டிப்பட்டி கிராமத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. பத்தாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை, 4:00 மணிக்கு தீபாராதனையுடன் விழா தொடங்குகிறது. 5:00 மணிக்கு ஹோமம் நிகழ்ச்சி, காலை, 6:00 மணிக்கு கோபுர கலச அபிஷேகம், மங்களஸ்தானம் நிகழ்ச்சி, காலை, 7:00 மணிக்கு சங்கல்ப பூஜை, 8:00 மணிக்கு கூட்டு பிரார்த்தனை, மஹா நெய்வேத்தியம் நிகழ்ச்சி நடக்கிறது.
இறுதியாக இன்று இரவு, 7:00 மணிக்கு சாய்பாபாவுக்கு தீபாராதனையுடன் விழா நிறைவடைகிறது. இன்று நாள் முழுதும் சாய் நாம ஜெபம் நடக்கிறது. பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.