/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு
/
டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு
ADDED : மார் 12, 2025 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: -பீஹார் மாநிலம், சம்பரன் மாவட்டத்தை சேர்ந்தவர் பரமானந்த் குமார், 32; இவர், பரமத்தி அருகே வள்ளியம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு தீவனம் அரைக்கும் மில்லுக்கு செல்ல, டிராக்டரில் அமர்ந்து சென்றார்.
டிராக்டரை வள்ளியம்பட்டியைச் சேர்ந்த காத்தமுத்து மகன் சதீஷ்குமார், 35, ஓட்டினார். குட்லாம்-பாறை பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்-பாட்டை இழந்து டிராக்டர் சாலையோரம் கவிழ்ந்தது. இதில், சம்-பவ இடத்திலேயே பரமானந்த்குமார் இறந்தார். பரமத்தி போலீசார், தலைமறைவான டிராக்டர் டிரைவர் சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.