ADDED : மார் 28, 2025 01:36 AM
அ நிறம் | அளவு
கிணற்றில் விழுந்துதொழிலாளி பலி
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, மொளசி அடுத்த சிக்கநாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்த சவுந்தர் 28, கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகிவில்லை. நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் நடந்து செல்லும் போது, தடுமாறி கிணற்றில் விழந்துள்ளார். நேற்று காலை அப்பகுதி மக்கள், மொளசி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் சடலமாக மிதந்த சவுந்தர் உடலை மீட்டு, போலீசிடம் ஒப்படைத்தனர். மொளசி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
