ADDED : ஏப் 01, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாட்டரி விற்றவர் கைது
குமாரபாளையம்:குமாரபாளையம் பகுதியில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார், பெரியார் நகர் பகுதியில், நேற்று மாலை, 1:00 மணிக்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த மாதேஷ், 42, என்பவரை கைது செய்தனர்.