ADDED : ஏப் 11, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடுகள் மாயம்போலீசில் புகார்
மகுடஞ்சாவடி:கூடலுார் ஊராட்சி புதுவளவை சேர்ந்தவர் ரஞ்சிதம், 62. விவசாய கூலித்தொழிலாளி. இவர், 3 ஆடுகளை வளர்த்தார். நேற்று முன்தினம் வீடு அருகே ஆடுகளை கயிற்றால் கட்டி வைத்திருந்தார். நள்ளிரவில் ஆடுகள் கத்த, ரஞ்சிதம் வெளியே வந்து பார்த்தார். அப்போது இரு ஆடுகளை காணவில்லை. அவர் நேற்று அளித்த புகார்படி, மகுடஞ்சாவடி போலீசார் விசாரிக்கின்றனர். ஒரு ஆட்டின் மதிப்பு, 5,000 ரூபாய் என, ரஞ்சிதம் தெரிவித்தார்.