ADDED : ஆக 09, 2025 01:47 AM
அ நிறம் | அளவு
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலையில் மலைகுன்றின் மீது பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, நேற்று ஆடி மாத பவுர்ணமி தினத்தையொட்டி, மாலை, 5:30 மணி முதல் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.
இரவு, 7:00 மணிக்கு, மலைமீது உள்ள மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. இரவு, 8:30 மணிக்கு, அடிவார மண்டபத்தில் உற்சவமூர்த்தி முருகன், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்வேறு வகை மூலிகை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடந்தது.
