/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஈரோடு எஸ்.கே., மருத்துவமனையில்100வது ரோபோடிக் மூட்டு சிகிச்சை
/
ஈரோடு எஸ்.கே., மருத்துவமனையில்100வது ரோபோடிக் மூட்டு சிகிச்சை
ஈரோடு எஸ்.கே., மருத்துவமனையில்100வது ரோபோடிக் மூட்டு சிகிச்சை
ஈரோடு எஸ்.கே., மருத்துவமனையில்100வது ரோபோடிக் மூட்டு சிகிச்சை
ADDED : ஏப் 10, 2025 01:24 AM
ஈரோடு எஸ்.கே., மருத்துவமனையில்100வது ரோபோடிக் மூட்டு சிகிச்சை
நாமக்கல்:ஈரோடு எஸ்.கே., மருத்துவமனையில், கடந்தாண்டு செப்., 15ல், ரோபோடிக் கருவி மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் முறையை, அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, நேற்று 100வது ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
இதுகுறித்து, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குமரவேல் கூறியதாவது: ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு, குவிஸ் தானியங்கி ரோபோடிக் கருவி பயன்படுத்தப்படுகிறது. தற்போதை மருத்துவ தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்தபடியாக தான் இந்த ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வந்துள்ளது. இந்த நவீன அறுவை சிகிச்சையின் பலனாக, இதுவரை நம் மருத்துவமனையில் மிக சிரமமான மூட்டு தேய்மானம் மற்றும் முழங்கால் மூட்டின் வளைவை கூட சுலபமாக சரி செய்ய முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

