sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'108' ஆம்புலன்ஸ் சேவையால் 39,938 பேர் பயன்

/

'108' ஆம்புலன்ஸ் சேவையால் 39,938 பேர் பயன்

'108' ஆம்புலன்ஸ் சேவையால் 39,938 பேர் பயன்

'108' ஆம்புலன்ஸ் சேவையால் 39,938 பேர் பயன்


ADDED : ஜன 29, 2025 01:22 AM

Google News

ADDED : ஜன 29, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'108' ஆம்புலன்ஸ் சேவையால் 39,938 பேர் பயன்

நாமக்கல்,:'நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஓராண்டில், '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை மூலம், 39,938 பேர் பயனடைந்துள்ளனர்' என, சேலம் மண்டல மேலாளர்

அறிவுக்கரசு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாமக்கல் மாவட்டத்தில், '108' அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள், 28 எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், 22 சாதாரண வகை, 4 நவீன

வசதிகள் கொண்டவை, 2 குழந்தைகளுக்கான இன்குபேட்டர், வென்டிலேட்டர் வசதி கொண்ட வாகனங் களாகும். இந்த சேவையில், 100க்கும் மேற்பட்ட டிரைவர்கள், மருத்துவ உதவியாளர், ஊழியர்கள் என, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த, 2024 ஜனவரியில், 3,580, பிப்ரவரியில், 3,023, மார்ச், 3,128, ஏப்ரல், 3,296, மே, 3,296, ஜூன், 338, ஜூலை, 3,199, ஆகஸ்ட், 3,462, செப்டம்பர், 3,489, அக்டோபர், 3,495, நவம்பர், 3,280, டிசம்பர், 3,302 பேர் என, மொத்தம், 39,938 பேர், '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவையால் பயனடைந்துள்ளனர்.

அவை, சாலை விபத்தால் பாதிக்கப்பட்டோர், 8,754 பேர், விஷமருந்து அருந்தி யோர், 2,168 பேர், வயிற்று வலி பாதிப்பு, 415 பேர், விலங்குகளால் தாக்குதல், 879 பேர், மோதல் விவகாரம், 2,400 பேர், நெஞ்சுவலி பாதிப்பு, 2,798 பேர், சர்க்கரை நோய் பாதிப்பு, 1,147 பேர், வலிப்பு நோய் பாதிப்பு, 1,165 பேர், கடுமையான காய்ச்சல், 2,082 பேர், தீக்காயம், 169 பேர், மூச்சுத்திணறல், 2,577 பேர், பக்கவாதம், 1,461 பேர், தற்கொலை முயற்சி, 282 பேர், விபத்து, 2,989 பேர், சுயநினைவிழத்தல், 1,719 பேர், கர்ப்பிணிகள், 4,319 பேர், பச்சிளங்குழந்தைகள், 452 பேர், சிறுவர்கள், 134 பேர், மற்றவை, 428 ஆகும். கடந்த ஆண்டை காட்டிலும், 3,733 பேர், '108' அவசரகால சேவை மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் பச்சிளம் குழந்தைகளுக்காக வென்டிலேட்டர், இன்குபேட்டர் வசதியுடன் கூடிய பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் கொண்ட, 24 மணி நேர, 2 சிறப்பு பச்சிளம் குழந்தைகள் ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அவசர தேவைக்கு இந்த, 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us