/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எள் 11,308 கிலோ ரூ.17 லட்சத்திற்கு ஏலம்
/
எள் 11,308 கிலோ ரூ.17 லட்சத்திற்கு ஏலம்
ADDED : பிப் 27, 2025 02:10 AM
எள் 11,308 கிலோ ரூ.17 லட்சத்திற்கு ஏலம்
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், உஞ்சனையில் செயல்படும் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் எள், தேங்காய் பருப்பு, நிலக்கடலை பருப்பு, கொள்ளு, பாசிப்பயறு, உளுந்து, ஆமணக்கு ஏலம் நடக்கிறது.
அதன்படி, நேற்று முன்தினம் நடந்த மறைமுக ஏலத்தில், விவசாயிகள், வியாபாரிகள் கலந்துகொண்டனர். ஏலத்தில், 140 விவசாயிகள், 11,308 கிலோ எள் அறுவடை செய்து கொண்டு வந்திருந்தனர்.
அவை, ஒரு கிலோ குறைந்தபட்சம், 158.20 ரூபாய், அதிகபட்சம், 189 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 17 லட்சத்து, 53,835 ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல், 18 விவசாயிகள், 845 கிலோ தேங்காய் பருப்பை கொண்டு வந்திருந்தனர். அவை, குறைந்தபட்சம், 121 ரூபாய், அதிகபட்சம், 139 ரூபாய் என, மொத்தம், ஒரு லட்சத்து, 1,646 ரூபாய்க்கு விற்பனையானது. ஆறு விவசாயிகள் கொண்டுவந்த, 918 கிலோ உளுந்து கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம், 70.30 ரூபாய், அதிகபட்சம், 72.40 ரூபாய் என, மொத்தம், 53,140 ரூபாய்க்கு வர்த்தகமானது.
போதையில் சாக்கடையில்