/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வி.ஏ.ஓ.,க்கள் 2ம் நாளாக போராட்டம்அடிப்படை பணி பாதிப்பால் மக்கள் அவதி
/
வி.ஏ.ஓ.,க்கள் 2ம் நாளாக போராட்டம்அடிப்படை பணி பாதிப்பால் மக்கள் அவதி
வி.ஏ.ஓ.,க்கள் 2ம் நாளாக போராட்டம்அடிப்படை பணி பாதிப்பால் மக்கள் அவதி
வி.ஏ.ஓ.,க்கள் 2ம் நாளாக போராட்டம்அடிப்படை பணி பாதிப்பால் மக்கள் அவதி
ADDED : பிப் 26, 2025 02:00 AM
வி.ஏ.ஓ.,க்கள் 2ம் நாளாக போராட்டம்அடிப்படை பணி பாதிப்பால் மக்கள் அவதி
நாமக்கல், :நாமக்கல் மாவட்டம், கொண்டமநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட கரடு புறம்போக்கில், அனுமதியின்றி கற்களை வெட்டி எடுப்பதாக வந்த புகாரை அடுத்து, கடந்த, 19ல், நாமக்கல் ஆர்.டி.ஓ., பார்த்தீபன் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, கல் குவாரியில் நிறுத்தப்பட்டிருந்த பாறைகளை உடைக்கும், 'ஹிட்டாச்சி' இயந்திரம், கம்ப்ரசர் டிராக்டர்கள், லாரிகள், டூவீலர்கள் என, 23 வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, 'முன்கூட்டியே அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை' எனக்கூறி, கொண்டமநாயக்கன்பட்டி வி.ஏ.ஓ., ஜான்பாஸ்கோ, விட்டமநாயக்கன்பட்டி வி.ஏ.ஓ., கோகிலா ஆகிய, இருவரையும், நாமக்கல் ஆர்.டி.ஓ., பார்த்தீபன், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். அதிர்ச்சியடைந்த மாவட்ட வி.ஏ.ஓ.,க்கள், 'சஸ்பெண்ட்' உத்தரவை ரத்து செய்யக்கோரி, நேற்று முன்தினம், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய ஆர்.டி.ஓ., பார்த்தீபன், 'கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக' உறுதியளித்தார்.
இந்நிலையில், 'சஸ்பெண்ட்' உத்தரவை ரத்து செய்யாததால், நேற்று இரண்டாம் நாளாக, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, இருப்பிடம், வருவாய், ஜாதி சான்றுகள், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, அடங்கல், பிறப்பு, இறப்பு பதிவு உள்ளிட்ட அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், சான்றிதழ் பெற முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கலெக்டர் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.