/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டிசம்பரில் 2வது சத்துணவு பணியாளர் முன்னேற்ற சங்க மாநில மாநாடு
/
டிசம்பரில் 2வது சத்துணவு பணியாளர் முன்னேற்ற சங்க மாநில மாநாடு
டிசம்பரில் 2வது சத்துணவு பணியாளர் முன்னேற்ற சங்க மாநில மாநாடு
டிசம்பரில் 2வது சத்துணவு பணியாளர் முன்னேற்ற சங்க மாநில மாநாடு
ADDED : ஆக 19, 2024 05:58 AM
நாமக்கல், : தமிழ்நாடு சத்துணவு பணியாளர் முன்னேற்ற சங்கத்தின், மாநில பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநில தலைவர் வீர முருகன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்-பாளர் சீனிவாசன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் அருண்சண்-முகம், ஏழுமலை, கோவிந்தராஜ், முருகேசன் ஆகியோர் முன்-னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு பணியாளர் முன்னேற்ற சங்-கத்தை, தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையில் இணைப்-பது, சங்கத்தின், 2வது மாநில மாநாடு, வரும் டிச.,ல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முதல்வரின் காலை உணவு திட்-டத்தை, சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கி, அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகியோரை அரசு பணியாளராக அறி-விக்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்-களை நிரப்ப வேண்டும்.சத்துணவு மையத்திற்கு உரிய பதிவேடுகளை அரசே வழங்க வேண்டும். சத்துணவு திட்டம் சிறப்பாக செயல்பட, 20 மையத்-திற்கு ஒரு மேற்பார்வையாளர் நியமனம் செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சத்துணவு திட்டம் இரண்டையும் இணைத்து, தனித்துறை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.